தல தோனிக்கு நடப்பு சீசன் தான், கடைசியாக இருக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து கூறிய நிலையில், CSK அணியின் CEO முக்கிய தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
CSK:
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது, தனது 13வது லீக் போட்டியை கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில், CSK அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதும் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதால், தோனி உட்பட அனைத்து CSK வீரர்களும் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை பார்ப்பதற்கு, தோனியின் வழியனுப்பும் நிகழ்ச்சியை போன்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது சட்டையில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டார். மேலும், தோனி மைதானத்தில் Tஷர்ட் மற்றும் டென்னிஸ் பந்துகளை ரசிகர்களிடம் அன்பாக எறிந்தார். இதனால், இந்த சீசன் தான் இவருக்கு கட்சி சீசனாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது.
CSK-வை வீழ்த்திய கொல்கத்தா அணிக்கு அபராதம்…, ஐபிஎல் நடத்தை விதியை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்!!
இந்நிலையில், CSK அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) காசி விஸ்வநாதன், தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், இது தோனியின் கடைசி சீசன் அல்ல எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தோனி “அவர்கள்(ரசிகர்கள்) எனக்கு பிரியாவிடை கொடுக்க முயற்சிக்கிறார்கள், எனவே கூட்டத்திற்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும், CSK வீரர்கள் பலர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல்வேறு பதாகைகளை ஏந்தி மைதானத்தை வலம் வந்தனர்.
View this post on Instagram