பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்காக பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
பயணம் ரத்து:
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பலப்பரீட்சை நடத்தும் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி 20 ஓவர் போட்டிகள் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அங்குள்ள கொரோனா பரவல் வீரர்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதால் இங்கு பாதுகாப்பு குறித்த அச்சம் உச்சத்தில் உள்ளது.
இதனால், நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவது குறித்த பயணம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில், தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு டாம் லாதம் தலைமையில் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் பயணம் ரத்தாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர், பாதுகாப்பு விஷயத்தில் வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளதால் இங்கு போட்டிகள் நடப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து, இந்த போட்டியை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அவர்களின் அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். விரைவில் இதற்கான மாற்று ஏற்பாடுகள் நடக்குமா என்ற எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்