விவசாயிகள் போராட்டம் குறித்த ரிஹானா கருத்து – கிரிக்கெட் பிரபலங்கள் மறைமுக எதிர்ப்பு!!

0

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா பாப் பாடகி ரிஹானா தனது கருத்தை தெரிவித்தார். தற்போது அதற்கு மறைமுகமாக கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ரிஹானா கருத்து:

டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி போராடி வருகின்றனர். தற்போது இதற்கு பல தரப்பினர் தங்களது ஆதாராவை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தனது கருத்து ஒன்றை தெரிவித்தார். டெல்லியில் தற்போது இணைய சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி இதனை ஏன் யாரும் பேசவில்லை என்று கூறியிருந்தார். தற்போது பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதில் கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் தங்களது மறைமுக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சச்சின் டெண்டுல்கர்:

இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் இருப்பவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளராக இருக்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவை பற்றி தெரியும். எனவே அவர்களே முடிவு செய்வார்கள். அனைவரும் ஒற்றுமையுடனே செயல்படுவோம்.

ரவி சாஸ்திரி:

இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கை வகித்து வருகிறது. மேலும் விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார்கள். இது நம் உள்நாட்டு பிரச்சனை. இதற்கு நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். ஜெய் ஹிந்த்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

விராட் கோஹ்லி:

வேறுபாடுகள் நிறைந்த கருத்துக்கள் வந்துள்ள இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். விவசாயிகள் நம் நாட்டின் ஓர் அங்கம். அனைத்து தரப்பில் சுமுகமான தீர்வு காணப்பட்டு, அமைதி நிலையுடன் நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன்.

ரோஹித் சர்மா:

நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் இந்தியா கண்டிப்பாக பலமாக தான் காணப்படும். நம் நாட்டின் வளத்திற்கு விவாயிகள் முக்கிய தொண்டுகளை ஆற்றி வருகின்றனர். தற்போது பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் முக்கியம். தீர்வு காண அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

கவர்ச்சிகரமாக சைடு போஸ் கொடுத்த நடிகை சமந்தா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

சுரேஷ் ரெய்னா:

ஒரு நாடக நாம் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்றும், நாளையும் உள்ளது. அதற்காக நாம் வெளிப்புற சக்தியினால் பிரிந்து குழப்பமடைகிறோம் என்று அர்த்தமாகாது. எல்லாவற்றையும் சுமுகமான பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும்.

ரஹானே:

நம் உள்நாட்டு பிரச்சனைகளை நாம் ஒற்றுமையாக தீர்ப்போம். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here