தற்போதைய நடைமுறையில் கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வங்கி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையத்தில் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கியின் ஓய்வறை (லவுஞ்ச்) வசதி வழங்கப்படுகிறது. இதில் WIFI, உணவு, குளியல், ஓய்வெடுப்பது போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக லவுஞ்ச் வசதி பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி Yes Bank கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், ஒரு காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.10,000 செலவழித்திருக்க வேண்டும். இந்த விதி மாற்றம் 2024 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர இருப்பதால், 2023 டிசம்பர் 21 முதலே காலாண்டு தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் ICICI கிரெடிட் கார்டு பயனாளர்கள், ஒரு காலாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 35,000 செலவழிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“LOVER” வெற்றியை தொடர்ந்து கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய மணிகண்டன்.. இவ்வளவு கோடியா??