ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே – 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!

0
ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே - 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!
ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே - 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!

பிஹாரில் உள்ள சனவே சிறையில் குறைந்தது 86 சிறைக்கைதிகள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் மர்ம சாவு – பெண்ணின் மீது தந்தை புகார்!!!

பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால், அவர்கள் அருகிலுள்ள கோவிட் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சிறை கண்காணிப்பாளர் அமித் குமார் கூறியுள்ளார். மீதமுள்ள கைதிகளின் சோதனை ஓரிரு நாட்களில் மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்ட கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்காக சிறை இயக்குநரகத்திடம் நாங்கள் உத்தரவு கோரியுள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.கைதிகளிடம் கோவிட் -19 சோதனை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் அவினாஷ் குமார், பாதிக்கப்பட்ட கைதிகள் ஒரு சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே - 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!
80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!

அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அறிகுறிகளைக் கண்ட உடனேயே கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீது சோதனைகளை நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.பிஹார் சனவே சிறையில் மொத்தம் 2000 கைதிகள் உள்ளனர், அவர்களில் 150 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வரும் வேளையில், சிறைக்கைதிகளிடமிருந்தும் தொற்று கண்டறிப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here