மகனை அடித்து கொன்றதாக பெண்ணின் மீது அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் – எண்ணிக்கையை கேட்டா அதிர்ந்து போவீங்க!!!
மகன் மர்ம மரணம்:
உளுந்தூர்பேட்டைக்கு (விழுப்புர மாவட்டம்) அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா துப்பாக்கி தொழிற்சாலையை அடுத்துள்ள பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். பாரதிராஜா வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் தொழில் செய்கிறார் .இப்படி இருக்க பாரதிராஜா வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்தி அறிந்து வந்த காவல் துறையினர் பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.நேற்று இரவு பாரதிராஜா தனது தந்தைக்குக் கால் செய்து பேசியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பின்னர் 11 மணிக்கு அவரது தந்தை பாரதிராஜாவிற்கு கால் செய்த போது சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இந்த தகவல் அறிந்து வந்த அவரது தந்தை தனது மகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி பாரதிராஜாவின் மனைவியின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில்; தற்போது திருச்சியில் சுதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது