மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை முடிவிற்காக காத்திருந்த 30 வயது உள்ள நபர், தனது கழுத்தை அறுத்து பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இறுதியில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் – எண்ணிக்கையை கேட்டா அதிர்ந்து போவீங்க!!!
இந்தியாவில் கோவிட்-19 முதல் அலையைவிட இரண்டாவது அலை வெகு வேகமாக பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் முதல் அலை டிசம்பர் மாதவாக்கில் ஒரு முடிவுக்கு வருவதைப் போல இருந்தது.ஆனால், மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் முதல் வாரத் துவக்கத்திலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவுடன் பலரும் திருமணங்கள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்த ஆரம்பித்தது, தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றால் பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
![கொரோனாவிற்கு பயந்து தற்கொலை செய்த நபர்!!!](https://enewz.in/wp-content/uploads/2021/05/shutterstock_1642065145-300x149.jpg)
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் மீண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததாக மருத்துவர்கள் கருதுகின்றனர். அரசு நோய் அறிகுறி உள்ள அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யும்படி வலியுறுத்திவருகிறது.இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் அரசு நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்து விட்டு முடிவு வருவதற்குள் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நபரின் மரணச்செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.