இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோய்பரவல் அதிகரிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் பகுதியில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நூலிழையில் உயிர் தப்பித்த பெண்மணி – இணையத்தை பதறவைக்கும் வீடியோ!!
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை மக்களை மிக கடுமையாக தாக்கி பல இன்னல்களை விளைவித்து வந்த்தது. தற்போது இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்பை விட தற்போது ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.எனவே உயிரிழப்பின் விகிதத்தை குறைக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
![ஊரடங்கு:கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பு - ஊரடங்கை நீட்டித்த காவல்துறை!!](https://enewz.in/wp-content/uploads/2021/05/Ahmedabad_night_curfew__PTI__1200x768-300x169.jpeg)
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருந்தும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு நடவடிக்கை நீட்டிக்கப்பட்டு வருகிறது.தற்போது அந்த வகையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நடவடிக்கையை வருகிற மே மதம் 21ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அஹமதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.