மும்பை பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதில் ஓர் பெண்மணி நூலிழையில் தனது உயிரை தக்கவைத்துள்ளார். அதற்கான வீடியோ தற்போது இணையத்தில் காட்டுதீயாக பரவி வருகிறது.
மும்பை:
தமிழகம், மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வானிலை ஆய்வு மையம், மழை மற்றும் காற்று அதிகமாக இருக்கும் இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது. தற்போது அந்த வகையில் நேற்று மும்பை மாநகர பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. கன மழையின் காரணமாக அங்கு பல மரங்கள் மற்றும் கம்பங்கள் சரிந்து விழுந்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
![நூலிழையில் உயிர் தப்பித்த பெண்மணி](https://enewz.in/wp-content/uploads/2021/05/Narrow-escape-for-woman-after-tree-falls-on-Mumbai-street-300x169.jpg)
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில் நேற்று மும்பை பகுதியில் உள்ள ஓர் தெருவில் பெண்மணி ஒருவர் மரத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு பெய்த கன மழை காரணமாக அந்த மரம் சரிந்து விழுந்தது. மரம் சரிவதை பார்த்த அந்த பெண் பதறியடித்து ஓடினார். நூலிழையில் அந்த பெண்மணி தனது உயிரை காத்துக்கொண்டார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது