கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க மற்றொரு நிறுவனத்திற்கு அனுமதி !!! – தட்டுப்பாடு நீங்குமா ???

0

தடுப்பூசி மருந்து போதிய கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணிகள் தொய்வு அடைந்து உள்ளது.இந்நிலையில் நாட்டில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க கோவாக்சின் தடுப்பூசி மருந்தை தயாரிக்க மத்திய அரசு எச்.பி.பி.சி.எல் என்னும்  நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த நிலைமையை சமாளிக்க மத்திய அரசு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்தை மறு உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை எச்.பி.பி.சி.எல் என்னும் நிறுவனத்திற்கு அளித்து உள்ளது.அதைப்பற்றி அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறுகையில் ஆண்டு ஒன்றுக்கு 22.8 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, மத்திய அரசிடம் தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருந்தோம் தற்போது எங்களுக்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை பயோடெக் நிறுவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்து முடிவடையும் நிலையில் தீவிரமாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பற்றி பேசி வருவதாகவும், அடுத்த 8 மாதங்களுக்குள் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here