கொரோனவிற்கான தடுப்பூசி மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய ஆரோக்கியம் உள்ளவர்களை வரும் திங்கள்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தேர்ந்தெடுக்க உள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த ஆண்டு சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா என்ற நோய் தொற்று உலகில் உள்ள அணைத்து நடக்குகளிலும் பரவியது. அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனவால் பல லட்சம் பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு பல நாடுகளும் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அதன் அடிப்படையில் கொரோனவிற்கான தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்தியா மருத்துவ கவுன்சில் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமே ஒன்றாகும். கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு பயன்படுத்த கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு எய்ம்ஸ் நெறிமுறைக் குழு ஒப்புதல் அளித்தது.
யார்யாருக்கு பரிசோதனை:
இந்த பரிசோதனை 375 நபர்களுக்கு பரிசோதிக்க படும் என்றும், அதில் 100 நபர்கள் டெல்லி எய்ம்ஸில் இருந்து வருவார்கள் என்றும் மற்றவர்கள் தன்னார்வலர்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, எய்ம்ஸ் சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் அவர்கள் கூறியதாவது ” நாங்கள் நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தான் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். ஆய்வு மக்கள்தொகையின் வயது 18 முதல் 55 வயது வரை.”
இது ஒரு சீரற்ற, இரட்டை குருட்டு, மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையாக இருக்கும். இதில் பங்குகொள்ள விரும்புவோர் [email protected] என்ற இணையமுகவரிக்கு தங்கள் விவரங்களை அனுப்பலாம் என்றும் அல்லது 7428847499 என்ற தொலைபேசி எண்ணிற்கும் அனுப்பலாம்.
முதல் மற்றும் இரெண்டாம் கட்ட பரிசோதனைக்கு எய்ம்ஸ் மருத்துவமையை சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும் மற்றவர்கள் மற்ற தளங்களில் பங்கேற்பார்கள்” என்று கூறினார்.
இந்த கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) இணைந்து உருவாக்கியுள்ளது. இது மனிதர்களின் நலனுக்காக முதல் மாற்று இரெண்டாம் கட்டமாக செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.