தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று மாநில அரசு அறிவித்த நிலையில் அந்த உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பின்னர் தற்போது குறைந்த தொற்றால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பல மாநிலங்கள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நாளை அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட கூடாது என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதாவது கொரோனா கட்டுப்பாட்டுக்கான நிலையான வழிமுறைகளை உறுதி செய்யாமல் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களிடம் கொரோனா தொற்று பரவாது என்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன? என்பதை தெரிவிக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இது குறித்த விசாரணையை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு அரசு கட்டாயப்படுதவோ அல்லது அபராதம் விதிக்க கூடாது என்றும் , நேரடி வகுப்புகளை நடத்தவில்லை என எந்த கல்வி நிறுவனத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்