தமிழகத்தில் மீனவர்களுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக விசைப்படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி மீன்பிடி உபகரணங்களை சீரமைத்து வருகின்றனர். வழக்கம்போல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மோச்சா புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடல் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த விஷயத்தால் தான் பீட்டர் பால் உயிரிழந்தார் – உண்மையை போட்டு உடைத்த வனிதா விஜயகுமார்!!
இத்தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை முதல் உரிய பாதுகாப்புடன் மீன் பிடிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். ஜூன் 14ம் தேதி வரை விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.