விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது சினிமாவில் குணசித்திர கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரை ஷோக்களிலும் நடுவராக இருந்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக இருந்து வந்தாலும், அவரின் திருமண வாழ்க்கை கேள்வி குறியாக தான் இருந்து வருகிறது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா தன்னுடைய யூடியூப் சேனலை கவனித்துக் கொண்ட பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அடஅட .., என்ன அழகுடா இது.., அளவில்லா கவர்ச்சியில் இளசுகளை டார்ச்சர் செய்யும் ரேஷ்மா!!
இதனை தொடர்ந்து சமீபத்தில் பீட்டர் பால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடைய இறப்பு காரணம் குறித்து வனிதா பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் கூறியதாவது, நான் பிரிந்து வந்ததில் இருந்து, அவர் 24 மணி நேரமும் குடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் அவருடைய கல்லிரலில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இருந்த இவர், இருக்கும் வரை அனுபவித்து செத்துவிடலாம் என்ற மனநிலைக்கு பீட்டர் பால் வந்துவிட்டார். அவர் உடம்பில் ரத்தத்தை விட அதிக அளவு மது தான் ஓடும். இதனால் தான் அவர் உயிரிழந்தார் என்று கூறினார். இருப்பினும் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை face செய்து, தற்போது சிங்கபெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வனிதா.