கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இயக்குநர் ஷங்கர்ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
இயக்குனர் அளித்த கொரோனா நன் கொடை:
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்கள்,சமூக நல அமைப்புகள்,பெருந்தொழில் நிறுவனங்களிடம் கேட்டு கொண்டார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த அறிவிப்பின் படி; பலரும் தங்கள் நன் கொடைகளை வழங்கிய வண்ணம் உள்ளனர். நடிகர் அஜித் குமார் 25 லட்சம் ரூபாய், 6 வயது சிறுவன் தான் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.1,000 என நன்கொடை அளித்ததை தொடர்ந்து இப்போது இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.