இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு பாதிப்பு.
இந்தியாவில் கொரோனா தாக்கம்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோல் குணமடைந்து வீடு செல்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டி உள்ளது எனவும் மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 10,167 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 68 பேர் பலி..!
இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.