இந்தியாவில் கொரோனா நோய் பரவலை குறைக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று(மே 1) முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் 6 மாநிலத்தில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா தொற்றினை குறைக்கும் வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் நாட்டில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் அதாவது இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் தற்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இன்று தடுப்பூசி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் 6 மாநிலத்தில் மட்டுமே இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, சத்திஸ்கர் மற்றும் உத்திர பிரதேஷ் ஆகிய 6 மாநிலங்களில் இன்று முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.