இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக இருந்து வரும் நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,01,993 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 4,01,993 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,91,64,969 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,523 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி மொத்தம் 2,11,853 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். அதேபோல் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,99,988 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குக் வித் கோமாளி பிரபலம் – தட்டுத்தடுமாறி அவரே வெளியிட்ட வீடியோ!!
இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 81.99%, உயிரிழப்பு விகிதம் 1,11% ஆக உள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 32,68,710 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.