கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக கொடூரமாக இருந்து வரும் நிலையில் மருத்துவங்களில் தொடர்ந்து சோகமான நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்களும் வேதனை அடைந்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஒரு பக்கம் மக்கள் தொற்றினால் உயிரிழந்து வருகின்றனர் மறுபக்கம் சிகிச்சையின்மை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்த அவல நிலை தொடர்ந்து நமது நாட்டில் அரங்கேறி வருகிறது. மேலும் சிகிச்சையின் போது பல நோயாளிகள் மிக கடுமையான அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் தனிமை படுத்தப்படுபவர்களும் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். சிலர் மட்டுமே இதனை தைரியமாக எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் டெல்லியில் சுருதி என்னும் பெண்மணி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 30 வயதாகிய இந்த பெண் 5 வயது குழந்தைக்கு தாயாவார். சிகிச்சையின் பொழுது தொடர்ந்து தைரியமாக இருந்த பெண் மற்ற நோயாளிகளுக்கும் தைரியத்தை ஏற்படும் வகையில் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் பாட்டு பாடும் படியும் கூறினார். அதற்கு அந்த மருத்துவர் லவ் யூ சிந்தகி என்னும் பாடலை பாடினார் அப்போது ஆக்சிஜன் கிடைக்காமல் திணறினாலும் அந்த பெண் நடனமாடி மிக தைரியமாக இருந்தார். அதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பேசிய சிகிச்சை அளித்த மருத்துவர், இவரது இழப்பு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உள்ளது என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்.