தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பு !!!

0
தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வாய்ப்பு !!!
தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வாய்ப்பு !!!தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வாய்ப்பு !!!

தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பு !!!

தற்போது கொரோனா நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க போவதாக அறிவித்துள்ளது.

ஈட்டிய விடுப்பானது தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் ஆகும். இந்த ஈட்டிய விடுப்பை எடுக்காத ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியம் வருட முடிவில் வழங்கப்படும். இந்த நிலையில் கொரோனா 2 ம் அலை பரவலின் காரணமாக தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிதி சிக்கலை சமாளிக்க தமிழக அரசு தற்போது பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டு தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில் கொரோனா நிதிச்சுமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க போவதாக அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அந்த அரசாணையில் 2022 மார்ச் 31 வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here