2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் நல திட்டங்கள் கிடையாது…!மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!!

0

மக்கள் தொகையை கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச அரசு புதிதாக  சட்டம் ஒன்றை கொண்டு வருகிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்று உத்திர பிரதேசம் ஆகும். இந்நிலையில் அதை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது என தெரிவித்து உள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசின் மாநில நீதி ஆணையம் ஒரு புதிய சட்டத்தை தாக்கல் செய்து உள்ளது. அதாவது, இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு குறைவான குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஊக்கதொகை மற்றும் இரண்டுக்கு அதிகமான குழந்தைகளை கொண்ட பெற்றோர்களுக்கு கூடுதல் வரி, சலுகைகள் ரத்து போன்ற திட்டங்கள் இந்த சட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

அதாவது இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்களுக்கு மாநில அரசின் நலத்திட்டங்கள் பெற தடை. 4 பேருக்கான ரேஷன் பொருட்கள் மட்டுமே பெற முடியும். உள்ளூர் தேர்தலில் போட்டியிட தடை. மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க தடை. ஏற்கனவே அரசு பணியில் இருந்தால் பதவி உயர்வு கிடையாது. இது போன்ற கட்டுப்பாடுகளை குறிப்பிட்டு உள்ளது.

மேலும் இவை அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளூர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவை அம்மாநில அரசு நாளை அதாவது ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய சட்டம் பற்றி மக்களிடம் அடுத்த 10 நாட்களுக்கு கருத்துக்கள் கேட்க இருப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here