விஜய் டிவி யில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் காவியா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத விதமாக பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ஹேமா கண்ணம்மா மேல் இருக்கும் பாசத்தால் கையில் அவரது உருவ பொம்மையை வைத்து கொண்டு அதனுடன் பேசிகொண்டுள்ளார். இது பலருக்கும் வேதனை அளித்தாலும் வேறு வழியில்லாமல் மனதை கல்லாக்கி கொண்டுள்ளனர்.
அடுத்ததாக பார்த்தால் அஞ்சலிக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏறடுகிறது. உயிர் போகும் அளவிற்கு இந்த பிரச்சனை வர இதற்கு அகிலன் என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை. இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி இருக்க மறுபடியும் சீரியலில் அறிவு மணியாக என்ட்ரி கொடுத்துள்ளார் நம் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.