தீவிரமடைந்த தென்மேற்கு பருவக்காற்று.. தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!!

0
A pedestrian walks with an umbrella as lightning strikes during an evening thunderstorm in Jammu on May 14, 2015. AFP PHOTO / RAKESH BAKSHI (Photo credit should read rakesh bakshi/AFP/Getty Images)
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் விளைவாக தமிழகத்தின் பரவலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. மேலும் புதிதாக உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம், காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கும், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here