கோலிவுட் திரையில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சோசியல் மீடியாவில் பிரபலமானார். இப்படி இருக்கையில் இவர் பாலாஜி என்பவரை திடக்கழிவில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் 16 கோடி வரை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளார்.
இதனால் நீதிமன்றத்தில் பாலாஜி ரவீந்தர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் இவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போது ரவீந்தர் தரப்பில் இருந்து பாலாஜிக்கு 2 கோடியை திரும்ப கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்படி கொடுக்கவில்லை என பாலாஜி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை அக் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதுவரை சிறையில் இருக்க ரவீந்தருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.