சேரி மொழி விவகாரம்., குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள்.., வளைத்து பிடித்த காவல்துறை!!

0
சேரி மொழி விவகாரம் வளைத்து பிடித்த காவல்துறை

சமீபத்தில் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய சம்பவம் என்றால் அது த்ரிஷாவை குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது தான். இவர் இப்படி தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகிறார் என்று மன்சூர் அலிகானை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு,  இது போன்ற சேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்டார்.

இதற்கு அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சேரி மொழி விவகாரம் குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால் 100 மீட்டருக்கு முன்னாடி காவல்துறை தடுத்து நிறுத்தினர். மேலும் தற்போது 100 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here