காங்கிரஸ் எம்.பி. கார்த்தி பி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!!

1

பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி சிதம்பரம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பதிவிட்டு உள்ளார். மேலும் சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்று:

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் நிதியமைச்சருமான பா சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தனது COVID-19 அறிகுறிகள் லேசானவை என்றும், இப்போது அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு ட்வீட்டில் கார்த்தி சிதம்பரம் தனது உடல்நிலையை உறுதிப்படுத்தினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

48 வயதான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், நான் கோவிட் 19க்கு நேர்மறையானதை பரிசோதித்தேன். எனது அறிகுறிகள் லேசானவை, மருத்துவ ஆலோசனையின்படி நான் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் மருத்துவ நெறிமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிந்தது – பொதுமக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா!!

இந்தியாவில் இதுவரை 18 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்கள் தொற்றுகள் பதிவாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பல மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது.

1 COMMENT

  1. ஐய்யயோ.. ப. சிதம்பரத்திற்கு வயசு 76 ஆகிறதே.. இனி என்ன ஆகும்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here