இந்தியாவில் பெரும்பாலானோர் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் முக்கிய வழித்தடங்களில், முன்பதிவு டிக்கெட் திறந்த சில தினங்களிலே விரைவாக தீர்ந்து விடுகிறது. இந்த நிலையில் அன்ரிசர்வ் டிக்கெட்டை எடுத்த சிலர் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவர், புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் புகார் பதிவிட்டு இருந்தார்.
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.., இந்த 3 நாள் டாஸ்மாக் கடை செயல்படாது.., வெளியான அறிவிப்பு!!!
அதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், சம்பவம் குறித்த நடவடிக்கை எடுப்பதற்காக புகார் செய்தவரின் மொபைல் நம்பர் கேட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பான புகார்களை 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது ரயில் மதாத் என்ற இணையதளத்திலோ புகார் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.