எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி குணசேகரனிடம் என்ன ஆனாலும் தர்ஷினியின் திருமணத்தை நடக்க விடமாட்டேன் என சவால் விடுகிறார். இதனால் உமையாள் குணசேகரனை தனியாக அழைத்து இவர்கள் ஏதாவது செய்வதற்கு முன்பாக நாம் யாருக்கும் தெரியாமல் திருமணத்தை முடிக்க வேண்டும் என்கிறார். இதை கேட்டு குணசேகரனும் சரி என்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் நிச்சய தேதியை குணசேகரன் முடிவு செய்வாராம். அப்போது ஜனனி நிச்சயத்தை எப்படியாவது நிறுத்தி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்க திடீரென அங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுமாம். இதனால் கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஜனனி விழிப்பிதுங்கி நிற்பாராம்.