தமிழகத்தில் நாளை (06-12-2022)இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நாளை (06-12-2022)இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை (06-12-2022)இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!!

திருவண்ணாமலை தீபத்திருவிழா பக்தர்கள் கூட்டத்தோடு வெகு விமரிசையாக நடந்து வருவதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் தீபத்திருவிழா நவம்பர் 27 முதல் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த தீபத்திருவிழா இந்த வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் படைசூழ அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை (டிசம்பர் 6) தீபத்திருவிழா காலை பரணி தீபம், மாலை மகா தீபம் என நடைபெற உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

இந்த தீப விழாவிற்கு 25 லட்ச மக்கள் கலந்து கொள்வதால் சிறப்பு பேருந்து, மாநிலங்களில் சிறப்பு ரெயில், பக்தர்களுக்கு அன்னதானம் என பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கூட்ட நெரிசலில் திருட்டு போன்ற அசம்பாவிதங்களை தடுக்க 945 சி.சி.டி.வி. கொண்ட செயற்கை கோளுடன் இணைக்கப்பட்ட அதி நவீன தொழில்நுட்ப மொபைல் கட்டுப்பாட்டு வாகனமும், காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., இவ்ளோ தீவிரமா? அதிரடியாக வெளியான ரிப்போர்ட்!!

மேலும்,டிசம்பர் 6 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் விதமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here