இளைஞருக்கு புது மொபைல் கலெக்டர்க்கு முதல்வர் அறிவுரை !!!

0

சூரஜ்பூர் கலெக்டர் இளைஞரை அறைந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும் அவர் இளைஞரின் மொபைலையும் தூக்கி எரிந்து உடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இளைஞருக்கு கலெக்டர் மொபைல் வாங்கி கொடுக்கவேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கலெக்டர் க்கு முதல்வர் அறிவுரை :

சூரஜ்பூர் கலெக்டர் இளைஞரை அறைந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியது. மேலும் இவர் இளைஞரின் மொபைலை தூக்கி  எரிந்து சேதப்படுத்தியதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. தற்போது இது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஒரு மூத்த அதிகாரியின் இது போன்ற நடத்தை ஏற்கக்கூடியது அல்ல என்று கூறிய அவர் தனது தனிப்பட்ட வருமானத்தில் இருந்து அந்த இளைஞருக்கு புதிய மொபைல் வாங்கி தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து ஐ ஏ எஸ் சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் , நேற்று நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு சர்மா மன்னிப்பு கூறினார் என்றும் சேதமடைந்த மொபைல்க்கு பதிலாக புதிய மொபைல் வாங்கி தருவதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here