நாட்டின் முன்னணி ஐடி நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடப்பு நிதியாண்டில், 42,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்ததோடு மட்டுமல்லாமல், 10% ஊதிய உயர்வும் கொடுத்துள்ளது.
நிறுவனம் அறிவிப்பு :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பதவி உயர்வு குறித்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு(MSI) சம்பள உயர்வுகளை அறிமுகப்படுத்தியது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனைத் தொடர்ந்து முன்னணி நிறுவனமான காக்னிசன்ட், நடப்பு நிதி ஆண்டில் 42,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இது போக, இந்த ஆண்டு 10% வரை சம்பள உயர்வு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் மதிப்பு இணை இயக்குனர் நிலைகளுக்கு உயர்ந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் அறிவிப்பு – 30 நாள் ஊதியத்தை வழங்க முடிவு! எவ்வளவு தெரியுமா?
இந்த நிறுவனத்தின் வருவாய் 14% உயர்ந்து ரூ.33,979 கோடியாக இருந்து வரும் நிலையில், இதன் 3 வது காலாண்டு முடிவுகளை அடுத்த மாத தொடக்கத்தில் இந்நிறுவனம் அறிவிக்க உள்ளது. தொடர்ந்து ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வெளியாகும் இந்த சர்ப்ரைஸ் அறிவிப்புகளால், அனைத்து ஊழியர்களும் உச்சகட்ட குஷியில் இருந்து வருகின்றனர்.