
தமிழகத்தின் நீலகிரியில் உள்ள முதுமலை வன காப்பகத்தில் தாயை இழந்த குட்டி யானையை வளர்த்த பாகன் தம்பதிகளின் “The Elephant Whisperer” என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. இதையடுத்து இந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி உலக அளவில் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த இந்த தம்பதிகளை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதனால் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளை முதல்வர் வரவேற்று பொன்னாடை போர்த்தி கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.
மேலும் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் என தம்பதிகளுக்கு ரூ.2 லட்சம் காசோலையையும் வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் உள்ள பாகன்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 நிவாரண நிதியாக தெரிவித்து உள்ளார்.