திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடந்த சம்பவம் தற்போது தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் முனியாண்டி அம்பிகா தம்பதிகளின் குழந்தைகள் தான் சின்னத்துரை சந்திரா செல்வி. இவர்கள் இருவரும் வள்ளியூரில் படித்து வரும் நிலையில் அங்கு சின்னத்துரை சக மாணவர்கள் தொடர்ந்து சாதியை வைத்து கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னதுரை தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க அவர்கள் அந்த மாணவர்களை எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள் சின்ன துறையை வீடு புகுந்து சரம் வாரியாக வெட்டியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அவரது தங்கை சந்திரா செல்வி தடுக்க வந்த போது அவரையும் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த இரண்டு பேரும் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 6 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள சின்னத்துரை அவரது சகோதரியை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சந்தித்து திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் காயம் அடைந்த சிறுவனின் தாய்க்கு தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்ட ரேஷன் கடைகளில் இனி தேங்காய் எண்ணெய் உறுதி…, வெளியான முக்கிய தகவல்!!