ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த பொருட்களில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்குமாறு, பல மாதங்களாக விவசாயிகள் உட்பட பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் முடிவில், “முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையாக கொண்டு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும். மேலும், மக்களின் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும்” என செல்லமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.
NLC விவகாரம்.., 18-வது நாளாக தொடரும் போராட்டம்.., இன்னும் முடிவு கிடைக்கவில்லை., ஊழியர்கள் வேதனை!!!