கடந்த மாதம் 26 ஆம் தேதி என்எல்சி பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.50,000 ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வழங்க வேண்டும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி என்எல்சி தலைமையகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு போராட்டம் நடத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் தற்போது நெய்வேலி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அண்ணா திடலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
18 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் தற்போது வரை ஊழியர்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. மேலும் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் என்எல்சி நிர்வாகமும் மௌனம் காத்து வருகிறது. இதனால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு போலீசார் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.