பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பிற பள்ளி கல்வி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மே 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “கொரோனா பரவல் காரணமாகக் குறிப்பிட்ட காலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பரவல் எந்த அளவுக்கு விரைவாகக் குறைகிறதோ அதற்கேற்ப விரைவாக பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம்” என்று கூறினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பிற பள்ளி கல்வி அதிகாரிகளுடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!