இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கிய நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று:
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த அத்தியாயத்தில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அயோத்தி ராம் மந்திர் வழக்கின் தீர்ப்பை 2019 நவம்பரில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் அளித்தது என்பது முக்கியமானது. இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் நீதிபதிக்கு கொரோனா உறுதியாகி உள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
நாட்டின் இரண்டு மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அமித் ஷா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தர்மேந்திர பிரதான் தனது பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா கடும் கண்டனம்!!
இரண்டு மத்திய அமைச்சர்களைத் தவிர, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாலி லால் புரோஹித்தும் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆக வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.