கடந்த 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டம் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இஸ்லாமிய மக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த சட்டம், தற்போதைய 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே அமலுக்கு வரும் என மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி சாந்தனு தாகூர் அண்மையில் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சாந்தனு அவர்கள், “நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் இன்னும் ஒரு வாரத்துக்குள் அமல் படுத்தப்படும்.” என உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.01.2024) – முழு விவரம் உள்ளே!!