சியான் விக்ரம் நடித்து நாளை (31-08-2022) ரிலீசாக உள்ள கோப்ரா படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காததால், தங்களுக்கு 1-ந் தேதி விடுமுறை அளிக்குமாறு கல்லூரி மாணவர்கள் எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது.
கோப்ரா படம்:
தமிழ் சினிமா துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடித்த சேது, சாமி ஐ, அந்நியன் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கோப்ரா.
நாளை வெளியாக இருக்கும் இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் செய்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் சியான் விக்ரமுக்கு அதிகமான ரசிகர்கள் எல்லா மாநிலத்திலும் இருக்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவரது படம் வெளியாகும் அன்று ஒரு பண்டிகையை போன்று கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த மாணவர்கள் நாளைக்கு வெளியாக உள்ள கோப்ரா படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் செப்டம்பர் 1ம் தேதி விடுமுறை தரும்படி அக்கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதுமட்டுமின்றி அன்று மாணவர்கள் வரவில்லை என்றால் பெற்றோருக்கு போன் செய்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது அந்த கடிதமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.