பண மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் – வெளியான திடுக்கிடும் தகவல்!!

0

சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை விஷயமாக கணவர் கைது செய்யப்பட்டார். இப்பொழுது அவருக்கும் இந்த தற்கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று செய்திகள் வெளிவந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் மீது மோசடி வழக்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இவருக்கு லாக்டவுன் சமயத்தில் ஹேமந்த் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றது. நீண்ட நாட்கள் இருவரும் பழகி வந்ததாகவும் அது காதலாக மலர்ந்து திருமணம் வரை சென்றுள்ளதாகவும் சொல்லப்பட்டது. சித்ரா இந்த நிச்சயத்திற்கு யாரையுமே அழைக்கவும் இல்லை. இந்நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்கொலை செய்யும் நேரத்தில் ஹேமந்த் தான் உடன் இருந்திருக்கிறார். அதனால் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு தான் சித்ராவிற்கும் ஹேமந்த்திற்கும் திருமணம் நடந்தது தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணத்தை தேட பல மர்மங்கள் வெளியானது. ஹேமந்த் ஒரு பொருக்கி என்றும் பலரையும் ஏமாற்றியுள்ளார் என்றும் சித்ராவின் தோழி வாக்குமூலம் கொடுத்தார்.

சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை – செம்பரப்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் திறப்பு!!

அதன் பிறகு தான் ஹேமந்த் பற்றிய பல விஷயங்கள் விஷயங்கள் கொஞ்சம் வந்தது. ஹேமந்த் பல விஐபி நண்பர்களை பழக்கம் வைத்துக்கொண்டு பெரிய ஆள் போல பலரிடம் காட்டியுள்ளார். சில பேரிடம் சினமா வாய்ப்பு வாங்கி தருவதாகவும் சொல்லி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் அனைவரும் திடுக்கிடும் விதமாக ஹேமந்த்தை கைது செய்துள்ளனர். 2 பேரிடம் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி 1.05 கோடி ருபாய் பணம் பறித்துள்ளார் ஹேமந்த். இப்பொழுது பணமோசடி வழக்கில் ஹேமந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here