ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கக் கூடாது.., அரசு அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

0
ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கக் கூடாது.., அரசு அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!
ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கக் கூடாது.., அரசு அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் ரேஷன் கார்டு மூலமாகவே மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர். அந்த அளவுக்கு ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. மேலும் புதிதாக ரேஷன் கார்டு பெறுவோருக்கு ஆதார் எண் கட்டாயம். அதே போல் ரேஷன் கார்டில் கூடுதலாக பெயர் சேர்க்க வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயர்களை சேர்ப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை. அவர்களின் பிறப்பு சான்றிதழ் வைத்து ரேஷன் கார்டில் பெயரை சேர்த்து கொள்ளலாம். இந்நிலையில் ஆதார் எண் இல்லாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கப்படுவதாக சில புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

பெண்கள் கவனத்திற்கு.., இலவச பேருந்தில் பயணிக்க எந்த கட்டுப்பாடும் இல்லை.., முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது, ஆதார் எண் பெறாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அவர்களை அணுகி ஆதார் எண் இணைக்க வலியுறுத்த வேண்டும். மேலும் ஆதார் எண் இல்லாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்க கூடாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here