உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் 3 வருடங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா பெருந்தொற்று. இந்த வைரஸின் தாக்கம் லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலியில் போன்ற அறிகுறிகளில் ஆரம்பித்து மரணம் ஏற்படும் அளவிற்கு தீவிரமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இந்த வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு WHO தடுப்பூசிகள் மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா பெருந்தொற்று புதிய அறிகுறிகளுடன் உருமாறிய நிலையில் மக்களை தாக்கி வருகிறது.
ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கக் கூடாது.., அரசு அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!
இதனால் பல்வேறு நாடுகள் முகக்கவசம், இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்றி பெருந்தொற்றின் பரவலைத் கட்டுப்படுத்தி வருகின்றனர். அதன்படி இந்த வைரஸால் உலகம் முழுவதும் 689,497,639 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 661,950,643 பேர் குணமடைந்துள்ளனர். இதுபோக 38,131 பேர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் COVID தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68. 84 லட்சத்தை தாண்டியுள்ளது.