உலகில் தற்போது பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது உருமாற்றம் அடைந்த டெல்டா ரக கொரோனா தான். மற்ற கொரோனா வைரஸ்களை காட்டிலும் அதிகம் வீரியம் மிக்கது இந்த டெல்டா ரக கொரோனா உலக சுகாதார நிறுவனமே தெரிவித்தது.
மேலும் இந்த வைரஸ் மூன்றாம் அலையை பல நாடுகளில் ஏற்படுத்தும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. நிபுணர்களும் மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் பல உலக நாடுகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் அமெரிக்காவில் டெல்டா ரக கொரோனாவால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் டெல்டா ரக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபுணர்கள் கணித்தது போல குழந்தைகள் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் இடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்