மீண்டும் பூதாகரமாக வெடித்த போதை பொருள் விவகாரம் – நீதிமன்றம் கார்த்தி பட நடிகைக்கு சம்மன்!!!

0

சினிமா உலகில் தற்போது மிக பெரிய விவகாரமாக கிளம்பி வருவது போதைப்பொருள் விவகாரம். இந்நிலையில் பல பிரபல நடிகர்கள் நடிகைகள் சிக்கி வருகின்றனர். இதையடுத்து தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு நீதிமன்றம் செப்டம்பர் 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

கன்னட திரைத்துறை மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற அருண் விஜய் அவர்களின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். எனினும் தமிழில் அந்த அளவிற்கு அவர் பேசப்படவில்லை. இதனால் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

எனினும் அவ்வப்போது தமிழும் தலை காட்டினார். அந்த வகையில் அவர் நடித்த திரன் அதிகாரம் ஒன்று என்ற படம் அவருக்கு வேற லெவல் அங்கீகாரத்தை தமிழில் பெற்று தந்தது. மேலும் அவர் தமிழில் ஸ்பைடர், தேவ், NGK  உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் தமிழில் சிவகார்த்திகேயன் அவர்களின் ஒரு படத்தையும், கமல் அவர்களின் ஒரு படத்தையும் கைவசம் வைத்து உள்ளார்.

 

இந்நிலையில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, சினிமா உலகில் பூகம்பமாக வெடித்த போதைப்பொருள் வழக்கில் பல பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிக்கினார்கள். இதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர் ஆவார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர் மட்டுமல்லாமல் இவருடன் சேர்த்து பல நடிகர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here