தமிழக இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று எழுத்தர்களுக்கு ஆண்டு தோறும் “இலக்கிய மாமணி விருது” பாராட்டு, பத்திரம் மற்றும் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
“இலக்கிய மாமணி விருது”
மறைந்த முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு 6 அறிவிள்ளது.
மேலும், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் விருது வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!