கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களுக்கு 5 ஆண்டு சம்பளம் – ரிலையன்ஸ் அதிரடி!!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்து உயிரிழந்துள்ள குடும்பங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு கடைசியாக வழங்கிய மாத சம்பளத்தை தொடர்ந்து வழங்குவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் அதிரடி:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலரும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை தருவது என பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், COVID-19 காரணமாக இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு கடைசியாக தரப்பட்ட மாத சம்பளத்தை தொடர்ந்து வழங்குவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இறந்த ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கு இளங்கலை பட்டம் வரை நிறுவனம் உதவி செய்யும் எனவும் கூறியுள்ளனர். மேலும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆஃப்-ரோல் ஊழியர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் 10 லட்சம் செலுத்துவதாக உறுதியளித்தது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தை வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here