தமிழக அரசு மருத்துவமனையில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் அறிவிப்பு!!

0
இங்கிலாந்து ராணி மறைவுக்கு தமிழக அரசு செய்த செயல் - தலைமை செயலகத்தில் நடந்த அதிரடி!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் இனி தடையில்லா மின்சார சேவை வழங்கப்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடையில்லா மின்சாரம்:

தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு கொரோனாவிற்கு எதிரான பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது.

எனவே இதுகுறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது ஊரடங்கு முடியும் வரை மேம்பட்டு பணிகளுக்கான மின்சார தடை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவமனைகளில் மின்சார தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை தொடர்ந்து தமிழக அமைச்சர் அரசு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கொளத்தூர் அரசு மருத்துவனை உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here