தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை – தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்!!

0

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வரவுள்ளார். தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தலை நடத்த போவதாக தெரிகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகள் குறித்த முடிவுகளையம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மிக முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலுக்காக இந்தியா பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒரே நாளில் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். எனவே தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தற்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகை தரவுள்ளார். இவர் வரும் 10ம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளார்.

மீண்டும் இணையும் கௌதம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தமிழகம் வருகை:

அவருடன் இரு துணை ஆணையர்களும் தமிழகத்திற்கு வர உள்ளனர். இங்கு வந்த அவர்கள் 10 மற்றும் 11ம் தேதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசிக்க உள்ளனர். மேலும் கட்சி பிரதிநிதிகளிடமும் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளார்கள். இதன் பின்பு இவர்கள் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்க செல்ல உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here