அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும் பொருட்டு மதிய உணவுத் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதிய உணவுத் திட்டம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மகத்தான திட்டமாக மதிய உணவுத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அரசால், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து கடந்தாண்டு தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் வந்த பிறகு அரசு பள்ளிகளில், பயணம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார். மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த உட்கட்டமைப்பு, சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள, புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
தமிழகத்தில் ஜன.11ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., வெளியான அறிவிப்பு!!
இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து திறனை அதிகரிக்கும் பொருட்டு மதிய உணவுத் திட்டத்தில் காய்கறி, முட்டையுடன் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு உதவியுடன் இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.371 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.