கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி இருந்தது இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படுவதால் மாணவர்களின் தேர்வுகள் பற்றி சில தகவல்களை வெளியிடுகின்றன கல்வி நிறுவனங்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தின் எம் பி ஏ தேர்வு முடிவு
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படுகின்றன மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்பட்ட அனைத்தும் நடத்த பேச்சுவார்த்தைகள் நாகின்றன, ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிப்புகள் வெளியாகியது.தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி வாயிலாக கடந்த டிசம்பரில் எம்.பி.ஏ தேர்வுகள் நடந்தது.
வீட்டுக்குள் சிக்னல் இல்லை – மேற்கூரையின் மீது ஏறி ஆன்லைனில் படிக்கும் மாணவி..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆனால் அதன் பிறகான பணிகள் யாவும் நடந்து முடிவதற்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு ஏற்பட்டதால் அவை கிடப்பில் போடப்பட்டன.தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு (ஜூன் 6 ஆம் தேதி) வெளியிடப்படும் என சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. இதனால் மாணவர்கள் / தேர்வர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை வெளியானபின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.